சிறைக்குப் போக பயப்படுகிறவர்கள் நாங்கள் அல்ல, சொல்கிறார் கனிமொழி

கடலூர் மாவட்டம் மற்றும் சிதம்பரம் நகர தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கனிமொழி எம்.பி,
தி.மு.க.வை அழிக்க கட்சியின் 2-ம் நிலை தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து வருகிறார்கள். சிறைக்கு செல்ல தி.மு.க.வினர் தயங்க மாட்டார்கள். சிறைகளை கண்டு அஞ்சுகிற கட்சி தி.மு.க. அல்ல என்றார். அதே சிறைகளை நிரப்ப தோளோடு தோள் நின்று அனைவரும் உறுதுணையாக இருந்து சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயாராகுங்கள் என்றும் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஒரு ஆண்டு சாதனை என்பது தன்னையே புகழ்ந்து கொள்வதே ஆகும். மக்கள் வாக்கு அளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்காக சட்டமன்றத்தில் பேச முடியவில்லை.
ஜெயலலிதா செய்த சாதனை என்பது தி.மு.க. தலைவர் கலைஞர் கட்டிய சட்டமன்ற கட்டிடத்தையும், அண்ணா நூலகத்தையும் மருத்துவமனைகளாக மாற்றியதுதான். மின்வெட்டு, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் வெளிநாட்டினர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முடியாத நிலை உருவாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் முதல்-அமைச்சரை சந்திக்க முடியாது. அமைச்சர்களே அவரை பார்த்துபேச முடியாது என்றால் எப்படி வெளிநாட்டினர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முடியும்? ஆனால் கருணாநிதி ஆட்சியில் அவசியம் கருதினால் அவரை எந்த நேரத்திலும் சந்தித்து பேச முடியும் என்று கூறிய கனிமொழி குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்து விட்டு கொடநாடு சென்று ஓய்வெடுத்து வருகிறார் என்றும் கூறினார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications