சவூதிஅரேபியாவின் 'பார்பி' இளவரசிக்கு வந்த சோகத்தைப் பாருங்கள்!

சவூதியை நிர்மானித்த சாத் மன்னரின் பேத்திதான் இந்த சாரா. சவூதி மக்களால் சவூதி அரேபியாவின் பார்பி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார், அவ்வளவு அழகானவர். நன்கு படித்தவர். இரக்க குணம் நிரம்பியவர்.
இந்த நிலையில்அவரது குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக சவூதியை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு வந்துள்ளார் சாரா. அங்கு தற்போது அரசியல் புகலிடம் கோரியுள்ளார் சாரா.
லண்டனில், ரகசிய இடத்தில் தங்கியுள்ள அவர் சண்டே டெலிகிராப் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது மிகவும் பயந்து போயிருக்கிறேன். என்னால் மீண்டும் சவூதி போக முடியாது. அங்கு எனக்கு ஆபத்து உள்ளது. என்னை அவர்கள் கொன்று விடுவார்கள்.
நான் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்தேன். மன ரீதியாக மிகவும் காயப்பட்டுள்ளேன். எனது சொத்துக்களை முடக்கி விட்டனர். ஈரானுக்கு எதிராக நான் இருப்பதால் என்னை வேட்டையாட முயலுகிறார்கள். எல்லா வகையிலும் என்னை முடக்கி வைத்துள்ளனர் என்றார் சாரா.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான சாரா, தற்போது புகலிடம் கோரி, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு லண்டன் வந்த அவர் அன்று முதலே இங்குதான் வசித்து வருகிறார். தற்போதுதான் புகலிடம் கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.
38 வயதாகும் சாரா, சவூதி அதிகாரிகள் தன்னை கடத்திச் செல்ல முயன்று வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு சூட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார் சாரா. அவருடன் அவரது நான்கு குழந்தைகளும், இரண்டு நாய்களும் தங்கியுள்ளன. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை பாதுகாப்புக்காக அமர்த்தியுள்ளார்.
சாரா தனது கணவரை ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தில் புகலிடம் கோரியிருப்பது சவூதி வரலாற்றிலேயே இதுதான் முதல் என்பதால் சாராவின் புகலிட கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications