புரூலியா ஆயுத வீச்சு: டென்மார்க் தூதரக உறவை குறைக்க இந்தியா முடிவு

இதையடுத்து டென்மார்க்குடனான தூதரக உறவுகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது
கடந்த 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் விமானம் மூலமாக மர்மமான முறையில் ஆயுதங்கள் வீசப்பட்டன. இதில் ஏ.கே.-47 துப்பாக்கிகள், கையெறிகுண்டுகளும் அடக்கம்.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிம் டேவி மீது வழக்குப் பதிவு செய்து. அவர் தற்போது டென்மார்க்கில் உள்ளதால் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர சி.பி.ஐ அதிகாரிகள், இன்டர்போல் மூலம் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து கிம் டேவி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இந்திய சிறைச் சாலைகளின் தரம், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து டென்மார்க் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை அப்பீல் செய்து டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க உதவ வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை டென்மார்க் அரசு ஏற்க மறுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து டென்மார்க் அரசுடன் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தியது. அதிலும் பலன் ஏற்படவில்லை.
இதையடுத்து டென்மார்க்குடனான தூதரக உறவுகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் அதிருப்தியை தூதர் மூலம் டென்மார்க் அரசிடம் மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மேலும் டென்மார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையையும் பணிகளையும் பணிகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரக அதிகாரிகளை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்திக்கக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications