என்னை தலைவராக ஏற்காதவர்கள் கட்சியில் இருந்து விலகலாம்: 'பெஸ்ட்' ராமசாமி
காங்கேயம்: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தொடர்ந்து செயல்படும். என்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் இதில் இருக்கலாம். எனது தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம் என்று பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கும் இடையே முற்றி வருகிறது.
கொமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை ஈஸ்வரன் மோசடி செய்துள்ளதாக பெஸ்ட் ராமசாமி சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் கொங்குநாடு முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தற்போது கட்சியில் உள்ள பிரச்சனைகளை குறிப்பிட்டு, பொதுச் செயலாளர் வேண்டாம் என்று பலரும் இங்கு பேசினார்கள். கொ.மு.கவின் நிறுவன தலைவர் நான் தான். கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் நிறுவன துணைத் தலைவரும் நான் தான்.
மேலும் இந்த இயக்கத்துக்கு பொதுச் செயலாளரை கொண்டு வந்ததும் நான் தான். அவரை நம்பி கட்சியில் செயல்பட விட்டேன். ஆனால் அவர் கட்சியை கைப்பற்ற முடிவு செய்ததோடு, என்னை கட்சியை விட்டு நீக்கவும், என்னை எதுவும் செய்யவும் துணிந்து விட்டார்.
மேலும் அவர் ஏதோ குறிப்பிட்ட சிலரை வைத்துக் கொண்டு கட்சியை நடத்தலாம் என்று நினைக்கிறார். அது நடக்காது. அவருக்கு கொங்கு மண்டலத்தின் வரலாறு தெரியாது. கோவை செழியனை அவர் நேரில் பார்த்ததுண்டா? பேசியதுண்டா?. கட்சியின் மூலம் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கிறார். மாறாக கட்சியை பற்றியோ, கொங்கு சமுதாயம் பற்றியோ அவருக்கு எந்த கவலையும் கிடையாது.
கொங்கு அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.10 லட்சத்தை தலைவரோ, பொருளாளரோ கையெழுத்து போடாத நிலையில் தன்னிச்சையாக செயல்பட்டு பொதுச் செயலாளர் முறைகேடாக எடுத்துள்ளார். அதற்கு அவர் முதலில் பதில் சொல்ல வேண்டும். மேலும் அவர் கொங்கு நாட்டில் வாழ்பவர் இல்லை. எனவே கொங்கு நாடு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமசாமி, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தொடர்ந்து செயல்படும். என்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் இதில் இருக்கலாம். எனது தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம். பொதுச் செயலாளரும் இருந்தால் இருக்கட்டும். என்னை பிடிக்காவிட்டால் வெளியேறி விடலாம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications