ரகசிய சந்திப்புக்குப் பின் 'குட்டு' உடைந்தது: குர்ஷித் மீது ஹசாரே கோபம்
பூனே: மத்திய அரசு தனது குழுவை உடைக்க சதித்திட்டம் தீ்ட்டுவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்பால் மசோதா குறித்து மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை கடந்த மாதம் 23ம் தேதி பூனே அருகில் உள்ள கேத் தாலுக்கில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் வைத்து சந்தி்த்து பேசியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அன்னா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த மாதம் 23ம் தேதி சல்மான் குர்ஷித் என்னை சந்தித்து லோக்பால் மசோதா குறித்து பேசினார். அப்போது அவர் இந்த சந்திப்பு ரகசியமாகவே இருக்கட்டும், உங்கள் குழுவினருக்குக் கூட தெரிய வேண்டாம். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேசிவிட்டு நாம் இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில் வலுவான லோக்பால் மசோதா குறித்து அறிவிப்போம் என்றார். மேலும் வரும் 25ம் தேதி நாங்கள் நடத்தவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்பு லோக்பால் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.
நானும் அவர் பேச்சை நம்பி இந்த சந்திப்பு பற்றி எனது குழுவினரிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மத்திய அமைச்சர் நாராயணசாமி எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், அண்மையில் நடந்த சந்திப்பில் நான் லோக்பால் மசோதா குறித்து மக்கள் கருத்தை கேட்க விரும்பியதாகத் தெரிவித்ததை பிரதமரிடம் அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் ஆள் மூலம் அனுப்பப்பட்டு அது என் குழுவினர் கையில் கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்த ரகசிய சந்திப்பு பற்றி எனது குழுவினருக்கு அவர்கள் தெரிவித்துவிட்டனர். இது நம்பிக்கை துரோகமாகும்.
சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் நான் அவரை சந்திக்க சென்றேன். ஆனால் என்னை ஏமாற்றிவி்ட்டனர். யாரையும் நம்புவது நல்லதல்ல என்பதை தெரிந்து கொண்டேன். இனிமேல் லோக்பால் மசோதா குறித்து எந்த அமைச்சருடனும் பேசத் தயாராக இல்லை என்றார்.
மேலும் அவர் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
அன்னா குழுவைப் பிரிக்க நடக்கும் சதியில் நீங்களும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சேர்ந்து கொண்டுள்ளீர்கள். இத்தனை கெட்ட குணங்கள் உள்ள தலைவர்களால் இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ? என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அன்னா குழுவை பிரிக்க யாரும் சதி செய்யவில்லை என்று சல்மான் குர்ஷித் தெரிவி்த்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications