என் பிறந்தநாளை முன்னிட்டு எல்லோரும் ரோட்டை ரிப்பேர் பண்ணுங்க...: கேப்டனின் அதிரடி ஆணை!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் அதுவும் மணிவிழா அடுத்த மாதம் வருகிறது. இதனால் ஆகஸ்ட் 25-ந் தேதியன்று திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் தமது 60-வது பிறநநாளையொட்டி சிறப்பு விழாவை நடத்துகிறார் கேப்டன்.
அத்துடன் தமது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை ஒரு மாத காலம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார் கேப்டன். இத்துடன் முடிந்தால் பரவாயில்லை. அடுத்து கேப்டன் போட்ட உத்தரவுதான் அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகளை உறைய வைத்திருக்கிறது.
அதுதான் சாலைகளை சீரமைக்க வேண்டும், சாலைகளின் தடுப்பு சுவருக்கு வர்ணம் பூச வேண்டும் என்று அதிரடியை கிளப்பிவிட்டிருக்கிறார் கேப்டன்.
இதேபோல்தான் மணல் கொள்ளையை தடுக்க தடுப்புச் சுவர் அமைங்கன்னு கேப்டன் போட்ட உத்தரவால் அரசாங்கத்திடமிருந்து "நில அபகரிப்ப்" மரியாதைதான் கிடைத்தது.
இப்ப சாலை சீரமைப்பு பணிக்காக என்ன மரியாதை கிடைக்குமோ என்று கலங்கிப் போயிருக்கின்றனர். இதனால் ஸ்கூலில் வாத்தியார்களிடம் பொய்சொல்வது மாதிரி டகால்ட்டி கொடுத்து எப்படி கேப்டனின் கிடுக்குப் பிடியில் இருந்து எஸ்கேப்பாவது என ப்ளான்போட்டபடியே வலம் வருகின்றனர் தேமுதிக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications