தூத்துக்குடி மாநகராட்சி ஆண்டு விழாவை மறந்த மேயர், கவுன்சிலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி ஆண்டு விழாவை நடத்த மேயர் மற்றும் கவுன்சிலர்கள் மறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி நகராட்சி 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மாநகராட்சியாக மாற்றப்பட்டது. புதிய மாநகராட்சியை அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் துவங்கி வைத்தனர். மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சியாக இருக்கையில் 51 வார்டுகளாக இருந்தது 60 வார்டுகளாக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி ரூரல், மீளவிட்டான், அத்திமரப்பட்டி உள்ளிட்ட 5 கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
மாநகராட்சியி்ன் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி பொறுப்பேற்றார். இந்நிலையில் தி்முக ஆட்சியின்போது மாநகராட்சி உதயமான நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியான பிறகு 2012ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் அதி்முகவைச் சேர்ந்த சசிகலா புஷ்பா மேயர் ஆனார். மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் அவர் என்பதால் இந்த ஆண்டு மாநகராட்சி உதயதின கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த 5ம் தேதி மாநகராட்சி ஆண்டு விழா கொண்டாடப்படவில்லை.
இவ்வாறு விழா கொண்டாட வேண்டும் என்பதை அதிகாரிகள் மேயரின் கவனத்திற்கு கொணடு செல்லவில்லை.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
ஒருவேளை திமுக ஆட்சியில் தூத்துக்குடியின் அந்தஸ்து உயர்த்தப்பட்டதால் நாம் ஏன் கொண்டாட வேண்டும் என நினைக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆனால் தனி நபர்களை விட ஜனநாயக அமைப்பு பெரியது. மாநகராட்சியின் ஆண்டு விழாவை நடத்தியிருக்க வேண்டும் என்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications