கட்டிடம் இடிந்து 10 பேர் பலியான சம்பவம்-ஜேப்பியார் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் கிராமத்தில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி வளாகத்தில் கூடைபந்து விளையாட்டு அரங்கு கட்டும் பணி நடந்து வந்தது.
கடந்த 6ம் தேதி இந்த விளையாட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் வெளி மாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 304 மற்றும் 308ன் கீழ் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் கல்லூரி இயக்குனர் மரிய வில்சன் (34), நாகர்கோவில் பொறியாளர்கள், அருள் ஜெய அப்ரோஸ் (28), ராஜ்குமார் (28), குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சுதானந்தன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந் நிலையில் கல்லூரியின் தலைவரான ஜேப்பியாரை இன்று அதிகாலை கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மருத்துவமனையிலேயே வைத்து போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜேப்பியாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரது உடல் நிலை கருதி மருத்துவமனையிலேயே காவலில் வைத்திருந்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் ஜேப்பியார் சிகிச்சை பெற்று வருகிறார்.
தரமற்ற, குறைவான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி, ஸ்திரத்தன்மைக்கு தேவையான கால அவகாசம் தராமல், தொடர்ந்து கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க முயன்றதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் ஜேப்பியார் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் மருத்துவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் ஜேப்பியார் அவதிப்பட்டு வருகிறார், அதற்காக எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பயணம் செய்ய முடியாத அளவில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜேப்பியார் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications