ஈமு கோழிகளைக் காப்பாற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் சேதுராமன் பாரட்டு
மதுரை: ஈமு கோழிகளைக் காப்பாற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூவேந்தர் முன்னணிக் கழகம் பாராட்டுத் தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மருத்துவ குணமுள்ள ஈமு கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஆடு, கோழி இவற்றிலுள்ள சத்துக்களைவிட கூடுதலான சத்துக்கள் நிறைந்தது ஈமு கோழிகள் என்பது உலகம் எங்கும் நிரூபிக்கப்பட்டுள்ள மருத்துவ உண்மை. ஈமு கோழிகள் மூலமாக உணவுப் பொருளாகவும், மருத்துவ ரீதியாக பயன்படுத்தக்கூடிய ஈழு ஆயில் போன்றவையும் இந்தப் பண்ணைகள் மூலமாக தமிழக மக்களுக்கு கிடைத்து வந்தது.
கடந்த சில வாரங்களாக சில ஈமு கோழி பண்ணை முதலீட்டாளர்கள் செய்த தவறுகளால் பல ஆயிரம் கோடி, சிலருக்கு இழப்பு ஏற்பட்டிருந்தாலும் பண்ணை கோழிகள் பராமரிப்பினை முதலாளிகள் செயல்படுத்தாத காரணத்தால் நாளொன்றுக்கு 100 முதல் 300 கோழிகள் வரை உயிரிழந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
கால்நடை வளர்ப்புத்துறையில் அதிக கவனம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக இலவச ஆடு, இலவச கோழி வளர்ப்புத் திட்டங்களை கடந்த ஓராண்டில் அமல்படுத்தியவர். ஈமு கோழிகள் வளர்ப்புப் பண்ணைகள் இப்போது அரசின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது. சரியான தீவன பராமரிப்பு இன்றி ஈமு கோழிகள் உயிரிழப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்ததை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக கால்நடைத்துறை இதில் கூடுதல் கவனம் செலுத்தி ஈமு கோழிகளின் உயிரினை காப்பாற்ற அவற்றை ஹைதராபாத்திலுள்ள தனியார் ஈமு பண்ணைகளுக்கு உடனடியாக கொண்டு செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருவது வரவேற்கத்தக்கது. ஈமு கோழிகளின் உயிரினை காப்பாற்றுவதற்கு 150 டன் தீவனத்தை அரசு கொள்முதல் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது. பசியால் தவித்த ஈமு கோழிகளை காப்பாற்றிய முதல்வருக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications