கறுப்புப் பண விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடவடிக்கைகள் பாதிப்பு

மக்களவையில் திங்கள்கிழமை காலையில் கேள்வி நேரத்தின்போது, கறுப்புப் பணத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் தில்லியில் நடத்தி வரும் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
இதேபோல் அசாம் வன்முறையைக் கண்டித்து மும்பையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தச் சம்பவத்தில் உளவுத் துறை செயல்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிவசேனாவின் ஆனந்த் கீதே தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியபோது, பாஜக உறுப்பினர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் இந்துக்களின் நிலைமை குறித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பேசிய சிவசேனாவின் உறுப்பினர்கள், மும்பை விவகாரத்தை மீண்டும் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை காலையில் தொடங்கியதும், ராம்தேவ் போராட்டம் குறித்து பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனால், மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அவையின் அலுவல் நடவடிக்கையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடிய போதும் பாஜக இதே விவகாரத்தை எழுப்பியது. அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பி.ஜே. குரியன், உரிய நோட்டீஸ் கொடுத்தால் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதியளிக்கப்படும் என்றார். ஆனால் பாஜகவினர் இதை எற்கவில்லை. இதனால் மீண்டும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications