எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்த ராம்தேவ்

Subscribe to Oneindia Tamil

Baba Ramdev
டெல்லி: கறுப்புப் பணத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த பாபா ராம்தேவ் இன்று நண்பகல் 12 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 9ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். நேற்று பிற்பகலில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு பவானாவில் உள்ள அம்பேத்கர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் தனது ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று இன்று நண்பகல் 12 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் அரங்கத்தை உடனே காலி செய்ய வேண்டும் என்று உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் அரங்கை காலிசெய்துவிட்டு ஹரித்வார் செல்கிறார்.

உண்ணாவிரதத்தை முடித்தாலும் கறுப்புப் பணத்திற்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+