ஈழத் தமிழர் துயர் துடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுதந்திர தின விழாவில் ஜெ.

சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சுதந்திர தின உரை:
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது. தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன். இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதுதான் எனது இலட்சியம்.
கடந்த 15 மாத ஆட்சிக் காலத்தில் எனது தலைமையிலான அரசு பல சாதனைகளை புரிந்துள்ளது. 2010-11ம் ஆண்டில் 76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இருந்தது. இது 2011-12 -ம் ஆண்டில் 106 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது.
காவிரியில் கர்நாடகம் உரிய நேரத்தில் நமக்குரிய பங்கை திறந்துவிடாததால் குறுவை சாகுபடியின் பரப்பு குறைந்துவிட்டது. இருப்பினும் தமிழக அரசின் 12 மணி நேர மும்முனை மின்சாரத்தால் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடியைப் பொறுத்தவரையில் வழக்கமான பரப்பளவில் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுளன. தமிழ்நாட்டில் மின்வெட்டு முழுவதும் நீங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்காக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன.
தமிழகத்தில் 33 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 25 லட்சம் பேருக்கு விலையில்லா பொருட்கள் வழங்கபப்ட்டன.
அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்லவும் இலங்கையில் சிங்களவருக்கு இணையான உரிமைகளைப் பெறவும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர் துயரை துடைக்க இனியாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ5 ஆயிரத்திலிருந்து ரூ7 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. தியாகிகளுக்கான மருத்துவபடி ரூ100லிருந்து ரூ500 ஆக அதிகரிக்கப்படும் என்றார் ஜெயலலிதா
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications