ஆடு எப்படி கத்தும், மாடு எப்படிக் கத்தும்?... நடித்துக் காட்டிய விஜயகாந்த்!!!

சேலத்தில் நடந்த தேமுதிகவின் பழங்குடியினருக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார் விஜயகாந்த். அப்போது அவர் கூறுகையில்,
வடமாநிலத்தவர்கள் அச்சமடைய வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்கிறார். அங்கு எங்கள் தமிழினத்தை சிங்கவளவர்கள் அடித்து கொன்றார்களே, அப்போது இந்த பிரதமர் எங்கே போனார்.
இப்போது நடக்கும் இந்த மாநாட்டுக்கு நேற்று மாலை 5 மணிக்குத்தான் அனுமதி தருகிறது போலீஸ். இந்த அரசு எங்களைப் பார்த்து பயந்துகொண்டிருக்கிறது.
மக்களுக்கு மாநில அரசு எதுவுமே செய்யவில்லை. தேமுதிக சார்பில் நான் இரண்டு லட்சம் மதிப்புள்ள இலவச பொருட்களை வழங்கினால், மாநில அரசு 20 லட்சத்துக்கு வழங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு எங்களை ஏன் தடுக்கிறீர்கள்.
ஆடு, மாடு கொடுத்துவிட்டு, அம்மா அம்மா என்று கத்துவதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். மே மே என்றுதான் ஆடு கத்தும், மா மா என்றுதான் மாடு கத்தும். மக்களை ஏன்தான் இப்படி ஏமாற்றுகிறார்களோ?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 6 லட்சம் பேர் எழுதினார்கள். அதில் 2 ஆயிரம் அல்லது 3 ஆயிரம் பேர்தான் தேர்வு செய்யப்படுவார்கள். அதிலும் இப்போது கேள்வித்தாள் அவுட் என்று செய்தி பரவி, மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிட்டது.
ஒரு அங்கன்வாடி பள்ளியில் சுண்ணாம்பு அடிப்பதைக் கூட ஆளும்கட்சியினர் தடுக்கிறார்கள். இருந்தாலும் எங்க கட்சிக்காரங்க அந்த பள்ளிக்கு போயிட்டாங்க. நான்தான் எங்க கட்சி எம்எல்ஏகிட்ட வேண்டாம் விட்டுவிடுங்க. வேலை செய்யவிடாமல் தடுத்ததாக நம்மமேல கேஸ் போடுவாங்க என்று சொன்னேன். அரசாங்கமே டாஸ்மாக்கை நடத்துகிறது. மிடாஸ் யாருடைய கம்பெனி என்றார் விஜயகாந்த். நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications