பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கின எதிர்க்கட்சிகள்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று முடக்கப்பட்டன.
2005-ம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடாமல் தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறது தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை. மத்திய அரசோ இந்த அறிக்கை தவறானது என்று வாதிட்டு வருகிறது.
இன்று காலை மக்களவை கூடிய போது பாஜக உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். அவர்களுக்கு இடதுசாரி கட்சிக உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதிமுக, தெலுங்குதேசமும் இந்த அமளியில் இணைந்து கொண்டன. எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அவை நடவடிக்கைகள் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில் பாரதிய ஜனதா தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், வெங்கய்யா நாயுடு ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக தாக்கிப் பேசினர். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த களேபரத்துக்கு மத்தியில் மத்திய அமைச்சர் பேனிபிரசாத் வர்மா, விலைவாசி உயர்வை ஆதரித்துப் பேசியதற்கு சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அமளிதுளிபட்டது மாநிலங்களவை. வேறு வழியில்லாமல் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications