தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக அனைவரும் சேர்ந்து பிரதமரை சந்திப்போம்-விஜயகாந்த் அழைப்பு

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சிங்கள இனவெறி அரசு தமிழக கடலோர மீனவர்கள் மீது தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டது. இதனால் உயிர் பலியானோர், உடல் உறுப்புகளை இழந்தோர், உடமைகளை இழந்தோர், எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்வுரிமைகளை இழந்தோர் என்ற அவல நிலைக்கு இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஆளானார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தையே அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் சிங்கள இனவெறி அரசு இன்று வரை தமிழக கடலோர மீனவர்கள் மீது தொடுத்த தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த கருணாநிதி ஆனாலும் சரி, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆனாலும் சரி, கச்சத்தீவை மீட்கவோ, கடலோர மீனவர்களின் ரத்தக் கண்ணீரை துடைக்கவோ வழி காண முடியவில்லை.
தினந்தோறும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் சோகக்கதையாக உள்ளது. முதலமைச்சர் என்ற முறையில் அவ்வப்பொழுது மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கும் கடிதங்கள் எழுதியும் இன்று வரை பலனில்லை.
சுண்டைக்காய் நாடான இலங்கை தற்போது கூட, இந்தியா கேட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை எந்த தயக்கமும் இல்லாமல் சீனாவிற்கு வாரி வழங்கி உள்ளது. இதைவிட இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட வெட்கக் கேடான தோல்வி எதுவும் இல்லை.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழ் உணர்வுள்ள, தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் கட்சி பாகுபாடின்றி, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த உணர்வை பிரதிபலிக்கின்ற வகையில் ஒரு குழுவாக டெல்லி சென்று, பிரதமரை சந்தித்து நிலைமையை விளக்கி தீர்வு காண்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications