வீடியோ கேம் பிரச்சனை: கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் அடித்துக் கொலை
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர்கள் 2 பேர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி ஊரணி தெருவில் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான வீடியோ கேம் விளையாட்டு நிறுவனம் இயங்கி வருகின்றது. மின்சாரம் இல்லாத நேரங்களில் கூட ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் அங்கு மாணவ, மாணவியரின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில் செல்வா என்ற மாணவரை ஒரு கும்பல் அடித்து உதைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நிறுவன உரிமையாளரும், அப்பகுதி இளைஞர்களும் சேர்ந்து அந்த மாணவர்களைக் கண்டித்து இனிமேல் இந்த பக்கமே வரக் கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் எச்சரிக்கையையும் மீறி நேற்று முன்தினம் இரவு 5 மாணவர்கள் மீண்டும் வீடியோ கேம் விளையாட வந்துள்ளார்கள். அப்போது நிறுவன உரிமையாளர் மற்றும் சிலரும் சேர்ந்து மாணவர்களைத் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் மாணவர்களை 9 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்துள்ளது. இதில் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் பாலமுருகன்(19), காரியாபட்டியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வரும் ராமநாதன்(21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அவர்களுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலில் சிகிச்சையளிக்கபட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்கள்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications