டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வினாத்தாளை அவுட்டாக்கிய விவகாரம்- முக்கிய குற்றவாளி பாலன் கோர்ட்டில் சரண்!
கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்ட விவகாரத்தில் போலீசார் தேடிவந்த முக்கிய குற்றவாளியான பாலன் என்ற ஸ்ரீதர்ராஜ் கோவை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
கடந்த 12-ந் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக தேர்வு எழுதிய பவானியை சேர்ந்த தனக்கொடி, அவரது கணவர் செந்தில், வரதராஜன், சுதாகர் ஆகிய 4 பேரை ஈரோடு போலீசார் கைது செய்திருந்தனர். இதில் வரதராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த பாலன் என்பவரிடம் இருந்து ரூ80 லட்சத்துக்கு வினாத்தாளை மின் அஞ்சல் மூலம் பெற்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பாலனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். ஆனால் பாலன் சிக்கவில்லை. பாலனின் கூட்டாளிகள் மூவர்தான் பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து தம்மை போலீஸ் நெருங்கியதை உணர்ந்த பாலன் என்கிற ஸ்ரீதர்ராஜ் நேற்று மாலை கோவை 3-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாலனை 24-ந் தேதி சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு ரமேஷ்பாபு உத்தரவிட்டார்.
குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தமிழகம் முழுவதும் தேடப்பட்ட வந்த பாலன் தற்போது சரணடைந்துவிட்டதால் அவருக்கு வினாத்தாளை கொடுத்த நபர் யார் என்ற விவரம் விரைவில் தெரியவந்து விடும். பாலனை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்திருக்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications