பாக். குழுவிடம் உள்நாட்டு அரசியலை பேசுவதா?: நிதீஷ்குமாருக்கு ராம்விலாஸ் பஸ்வான் கண்டனம்
லக்னோ: பீகார் மாநிலத்துக்கு வருகை தந்த பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழுவிடம் உள்நாட்டுஅரசியல் விவகாரங்களை முதல்வர் நிதீஷ்குமார் பேசியதற்கு லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளதாவது:
உள்நாட்டு அரசியல் விவகாரங்களை பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழுவிடம் எழுப்பியதன் மூலம் நிதீஷ்குமார் தமது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியுள்ளார். தமக்கு முன்பு ஆட்சியில் இருந்தவரின் பெயரைக் கெடுக்க அவர் முயற்சித்தது சரியானது அல்ல. வெளிநாட்டு விருந்தினர்களின் முன்னால் தங்களது அரசியல் எதிரிகளைத் தாக்குவது, அரசியல் நீதி நெறிமுறைகளுக்கு எதிரானது. வெளிநாட்டவர் முன் ஒற்றுமையைக் காட்டி, நம் நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கோருவது சரியல்ல. அரசியல் எதிரிகளை பதவி விலகக் கோருவதற்கு தலைமைத் தணிக்கை அறிக்கை என்பது அளவுகோல் அல்ல. அப்படிப் பார்த்தால், பீகார் அரசில் ரூ.82 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கையைக் கொண்டு நிதீஷ்குமார் பதவி விலகியிருக்க வேண்டும். பீகாரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் பெண்களின் கர்ப்பப்பைகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்தப் பெண்களுக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும் என்றார் அவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications