கழுகுமலை அருகே தீண்டாமை வேலி: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தூத்துக்குடி: கழுகுமலை அருகே காலனியைச் சுற்றியுள்ள தீண்டாமை முள்வேலி குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டு தீர்த்தவாரி எடுத்து வந்த காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை ஒரு பிரிவினர் தாக்கினர். தொடர்ந்து 2007ல் இதே பிரிவைச் சேர்ந்த இளம்பெண் சுபா தற்கொலை செய்து கொண்டார். சாதியை சொல்லி திட்டியதால் அவர் தற்கொலை செய்தததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த அடுத்த மாதம் சுந்தரம் என்பவர் தாக்கப்பட்டார். இவ்வாறு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் இரு பிரிவினரிடையே மோதல் போக்கு இருந்து வந்தது.
பகை முற்றிய நிலையில் 2006ம் ஆண்டில் காலனியைச் சுற்றி மற்றொரு பிரிவினர் முள்வேலி அமைத்தனர். இதனால் தங்களின் நடமாட்டம் முற்றிலும் முடக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். புகாரை விசாரித்த அதிகாரிகள் தங்களின் சொந்த நிலத்தில் விவசாயிகள் வேலி அமைத்திருப்பதாக கூறி வழக்கை முடித்துக் கொண்டனர். இந்நிலையில் முள்கம்பி வேலி குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்,
பெண்கள் ஒதுங்குவதற்கு கூட 1 கி்மீ சுற்றி தான் செல்ல வேண்டும். சுமார் 6 ஆண்டுகளாக இந்த அவஸ்தையை அனுபவிக்கிறோம். குடிநீர் விநியோகம் கூட அடிக்கடி நி்ன்றுவிடுகிறது. எங்களுக்கு கடையில் பொருட்கள் தருவதில்லை. கடந்த வாரம் பஸ் ஏறச் சென்ற என் தம்பி மனைவிக்கு திடீரென மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய போது தண்ணீர்கூட கொடுக்க மறுத்துவிட்டனர் என்றார்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications