நாடாளுமன்றத்துக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்கிறார் ஜெ: மூவர் குழுவும் அறிவிப்பு!!
அதிமுக செயற்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது:
மத்தியில் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம். அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு இப்போதே மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு வாக்கு கேட்டு செல்லும்போது, மக்களிடம் நாம் தலை நிமிர்ந்து செல்ல வேண்டும்.
தேர்தல் குழு அமைப்பு
மக்களவைத் தேர்தலுக்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர் ஒவ்வொரு தொகுதியாக வருவார்கள். அவர்களிடம் மக்கள் குறைகளை சொல்லுங்கள். 40 தொகுதிகளுக்கும் வேண்டியதை நான் செய்வேன். மத்திய ஆட்சியில் நமது பங்களிப்பு இருந்தால் தான், தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை நாம் நிறைவேற்ற முடியும் என்றார் ஜெயலலிதா.