செங்கல்பட்டு முகாமிலிருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை- தமிழக அரசு
சென்னை: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 இலங்கைத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இவர்களின் குடும்பத்தாரும், ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகளும், கட்சிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில், இலங்கைத் தமிழ் அகதிகளான பராபரன், தி.சதீஷ், வி.சதீஷ், சண்முகநாதன், சேகரன், விக்னேஷ்வரன், டிஸ்கி முகமது உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இவர்களில் செந்தூரனின் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் தலைவர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன. செந்தூரனை வைகோ நேரில் சென்று பார்த்தார். மேலும் மதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 7 அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பராபரன், தி.சதீஷ் வி.சதீஷ், சண்முகநாதன், சேகரன், விக்னேஷ்வரன், டிஸ்கி முகமது ஆகியோர் இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூ பிரிவு போலீஸாரின் பரிந்துரைப்படி இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications