சிவகாசி வெடிவிபத்து: குத்தகைக்காரர் உள்பட 12 பேர் கைது, ஆலை உரிமையாளருக்கு வலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிபட்டியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த ஓம் சக்தி பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஓம் சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசன், ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்து தலைமறைவான அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதையடுத்து ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய ராஜு மகன் பால்பாண்டி(30). ஒப்பந்ததாரர்கள் செல்வம் மகன் ஸ்ரீகாந்த், சிங்கராஜ் மகன் அண்ணாதுரை, போர்மேன் உதயகுமார்(29), மகேந்திரன்(29), கெமிக்கல் மிக்சர் பாண்டிதுரை(24), கணக்கு பிள்ளை பாண்டீஸ்வரன், சண்முகராஜா, காளியப்பன், பாண்டியராஜா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மகேந்திரனும், பாண்டிதுரையும் பால்பாண்டியின் தம்பிகள்.
தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் முருகேசனைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று விருதுநகர் எஸ்.பி. நஜ்மல் ஹோடா தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications