நைட் ஷிப்ட்டுக்கு செல்லும் பெண்களுக்கு 'மிளகுத் தூள் ஸ்ப்ரே': மகாராஷ்டிரா அரசு உத்தரவு

கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி புனேவில் ஒரு பிபிஓவில் பணிபுரிந்த பெண் ஒருவர் அலுவலக கேப் டிரைவர்களால் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த புனே நீதிமன்றம் டிரைவர்கள் புருஷோத்தம் போரலே(26) மற்றும் பிரதீப் கோகடே(20) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
அந்த விசாரணையின்போது இரவு பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் கவலை தெரிவி்த்தது. இதையடுத்து மாநில அரசு பெண்களை இரவு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு 3 பக்க அறிக்கையாக நீதிமன்றத்தில் நேற்று சமர்பித்தது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை வேலை பார்க்கும் பெண்களின் வீட்டுக்கு சென்று அழைத்து வரவும், திரும்பவும் கொண்டு சென்றுவிடவும் நிறுவனத்தார் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த வாகன உரிமையாளர், டிரைவர் ஆகியோர் குறித்து போலீசார் விசாரித்த பிறகே அந்த டிரைவரை பணியமர்த்த வேண்டும்.
பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டு கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். கேப் டிரைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழியையை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் கட்டுப்பாட்டு அறை மூலமே தொடர்பு கொள்ள வேண்டும். வாகனங்களுக்குள் இருப்பவர் வெளியே தெரியும் வகையில் கண்ணாடிகள் இருக்க வேண்டும். டாக்சிக்கு பதில் மினி பஸ்களை பயன்படுத்த வேண்டும்.
அனைத்து வாகனங்களிலும் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். அலுவலக நுழைவுவாயில்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இது தவிர பெண் ஊழியைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பதோடு அவர்களுக்கு மிளகுத்தூள் ஸ்ப்ரே கொடுக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளை மீறும் ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications