கூடங்குளம் பிரச்சனை: ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடி- 13 பேர் கைது

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 11.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை அடைந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், என்.ஆர்.சிவபதி, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ., குமார் எம்.பி., மேயர் ஜெயா ஆகியோர் சிறப்பான வரேவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவர் காரில் ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு தெற்குச் சித்திரை வீதி-மேலச் சித்திரை வீதி சந்திப்பில் பகல் 11.45 மணிக்கு துவங்கிய அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேலூரில் ரூ.8.67 கோடி மதிப்பில் அமைக்கப்படும் வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஸ்ரீரங்கம்- திருவானைக்காவல் பாதாள சாக்கடை திட்டம், ஸ்ரீரங்கம் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டப் பணிகளை துவங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி உரை நிகழ்த்தினார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையும், வரவேற்பும் அளிக்கப்பட்டது. கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். அங்கிருந்த பக்தர்களுக்கு முதல்வரின் விருப்பப்பட்டியல்படி சென்னையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் அறுசுவை நடராஜனின் மகன் குமார் தலைமையில் 120 பணியாளர்கள் சமைத்த உணவு பரிமாறப்பட்டது.
முதல் பந்தியில் 333 பேர் உணவு உண்டனர். அவர்களுக்கு இனிப்பு வகைகள் உள்பட 16 வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இங்கு முதல்வர் அன்னதான திட்டத்தை துவங்கிய அதே நேரத்தில் பழனி முருகன் கோவிலிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
அவரின் வருகையையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் ஜெயலலிதாவை வரவேற்க சாலையின் இருபுறத்திலும் ஆண்களும், பெண்களும் நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்து முதல்வர் கை அசைத்தவாறே சென்றார்.
ஆனால் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கூடங்குளம் பிரச்சனை குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கறுப்புக் கொடி காட்டிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications