மேலூர் அருகே கண்மாய்க்குள் 3 அடுக்காக அடுக்கி புதைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள்
மேலூர்: மேலூர் அருகே கண்மாய் ஒன்றுக்குள் 3 அடுக்காக அடுக்கி கிரானைட் கற்கள் புதைக்கபப்ட்டிருந்தது அம்பலத்துக்கு வந்தது. இப்படி கண்மாய்க்குள் புதைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களைக் கண்டுபிடிக்க அதி நவீன சேலர் கருவிகளை இங்கிலாந்திலிருந்து மதுரை மாவட்ட நிர்வாகம் வாங்கியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது மதுரை, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை. இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் பிடிபட்டுள்ளனர். இன்னமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலூர் கீழவளவை அடுத்த இ. மலம்பட்டியில் உள்ள நவக்குடி கண்மாய் மழை வெள்ளத்தால் நிரம்பியதால் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. மழைவெள்ளத்தால் மணல் கரைந்து ஓட தண்ணீரும் தேங்காமல் போய்விட்டது. ஆனால் தரைக்குள் புதைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள் மட்டும் பளிச்சிட்டு தெரிந்திருக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ர்ந்து கண்மாய்க்குள் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 அடுக்குகளாக கண்மாய்க்குள் கிரானைட் கற்கள் அடுக்கி புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இப்படி பல ஆயிரம் கற்கள் கண்மாய்க்குள் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த கற்களை புதைத்த கிரானைட் நிறுவனம் எது என்பது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,.
அதிநவீன லேசர் கருவிகள்
நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களைக் கண்டுபிடிக்க ஏற்கெனவே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆளில்லா சிறுரக விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலூர் சுற்றுவட்டாரத்தின் 23 நீர் நிலைகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களைக் கண்டுபிடிக்க அதி நவீன லேசர் கருவிகளை இங்கிலாந்து நாட்டிலிருந்து வாங்கியுள்ளனர். இக்கருவிகளைக் கொண்டு இன்று முதல் நீர் நிலைகளில் சோதனை நடத்தப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications