வெறிநாய் கடித்துக் குதறியதில் 8 வயது சிறுமி பரிதாப மரணம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஒரு வெறிநாய் கொடூரமாக கடித்துக் குதறியதில் 8 வயது சிறுமி அநியாயமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகள் ஜனனி. 8 வயதாகும் ஜனனி, 3ம் வகுப்பு படித்து வந்தார். தான் வசித்து வந்த மருதாணிக்குளம் பகுதியில் சிறுமி ஜனனி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் இருந்த வெறிநாய் ஒன்று ஜனனியை கடிக்க ஆரம்பித்தது. பயந்து ஓட முயன்ற ஜனனியை அந்த நாய் விடாமல் கடித்தது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த நாயை விரட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை.

விடாமல் சிறுமியை கடித்துக் குதறிய அந்த நாய் பின்னர் தப்பி ஓடி விட்டது. படுகாயமடைந்து துடித்த ஜனனியை பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு ஜனனி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஜனனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+