கோவை துணை போலீஸ் கமிஷனர் ஹேமா கருணாகரன் புற்றுநோயால் மரணம்

Subscribe to Oneindia Tamil

Hema Karunakaran
கோவை: கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஹேமா பிரமீளா கருணாகரன், புற்று நோயால் இன்று மரணமடைந்தார்.

கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்தார் ஹேமா கருணாகரன். இவரது கணவர் கருணாகரன் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறார். ஹேமா மதுரையைச் சேர்ந்தவர்.

ஹேமா கருணாகரனுக்கு சமீபத்தில்தான் புற்று நோய்த் தாக்கம் குறித்து தெரிய வந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடையவே மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார் ஹேமா கருணாகரன்.

ஏடிஎஸ்பி, எஸ்பி, உதவி ஆணையர், துணை ஆணையர் என பல நிலைகளில் பணியாற்றியவர் ஹேமா. மது விலக்குப் பிரிவு உதவி ஆணையராகப் பணியாற்றியபோது சிறப்பாக செயல்பட்டதற்காக உத்தமர் காந்தி விருது பெற்றவர்.

மதுரையில் தனது காவல்துறைப் பணியைத் தொடங்கியவர் ஹேமா. முதலில் மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையராகவும், வரதட்சணை தடுப்புப் பிரிவிலும் பணியாற்றினார். மதுரையிலேயே மது விலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர், தல்லாகுளம் உதவி ஆணையராக இருந்துள்ளார்.

மேலும் மதுரையில் கூடுதல் துணை ஆணையராகவும் இருந்துள்ளார். சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பியாகவும் இருந்துள்ளார்.

கோவையில் சிறப்புக் காவல் படையில் சிபிசிஐடியின் கூடுதல் எஸ்.பியாக இருந்துள்ளார்.

படம்: தி ஹிண்டு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+