நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயார்: ஜெயலலிதா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத்தில், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது.
இந் நிலையில் சென்னை கோட்டையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. அதில், நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிமுக எம்பிக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் ஏற்கனவே எதிர்த்து வருகிறோம். இதுகுறித்து ஏற்கனவே நான் விளக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளேன். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்பதை தெளிவாக கூறியிருக்கிறோம். இதில் எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஜெயலலிதா,
இருக்கலாம். ஆனால் இதுவரை எங்களை யாரும் இது தொடர்பாக தொடர்பு கொள்ளவில்லை.
அவ்வாறு தீர்மானம் கொண்டு வரப்பட்ட பிறகு அது வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்து எங்கள் நிலையை முடிவு செய்வோம் என்றார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது காங்கிரஸ் அரசு நடத்திய நாடகம் என்றார்.
ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி நடக்கிறதே என்று கேட்டதற்கு, அது அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்றார்.
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்கிறார்களே என்று நிருபர்கள் கேட்தற்கு, நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது என்றார் ஜெயலலிதா.
இடதுசாரிகளின் ஆதரவு கோரும் மம்தா:
இந் நிலையில் இந்தத் தீர்மானத்தை இடதுசாரிகளும் பாஜகவும் ஆதரிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று கூறியுள்ளது.
பாஜக ஆதரவு கிடைக்குமா?:
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க பாஜக தலைவர்களின் கூட்டம் இன்று மூத்த தலைவர் அத்வானியின் இல்லத்தில் நடந்தது. ஆனால், இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதை வெற்றி பெறச் செய்வது கடினம் என்பதால், இதை ஆதரிப்பது என்பது நமக்குத் தோல்வியைத் தந்துவிடும் என்று பல தலைவர்களும் கருத்துத் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடமும் பேசிவிட்டு இதில் இறுதி முடிவெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications