கசாப் தூக்கிலிடப்பட்ட எரவாடா சிறையின் வரலாற்று பின்னணி...

6.8 ஹெக்டேரில் பரந்துவிரிந்து கிடக்கும் எரவாடா சிறைதான், மகாராஷ்டிராவின் மிகப் பெரிய சிறையாகும். இது 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்திக்கு தனி கோயிலும் இருக்கிறது.
புனே ஒப்பந்தம்
1930களில் தலித்துகளுக்கு தனித் தொகுதி முறையை அப்போதைய ஆங்கில அரசாங்கம் உருவாக்க முனைந்தது. இது இந்துக்களிடத்தில் பிளவு ஏற்படுத்தும் முயற்சி என்று கூறி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். லண்டன் வட்ட மேசை மாநாட்டில் போராடிப் பெற்ற தனித் தொகுதி முறையை காந்தி எதிர்க்க அம்பேத்கருக்கு இடியாப்பச் சிக்கலானது. ஆனால் அப்போது தந்தை பெரியாரோ, காந்தியாரின் ஒரு உயிரைவிட கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை முக்கியமானது என்று கூறியதுடன் தனித் தொகுதி முறையில் அம்ப்தேகர் உறுதியாக இருக்க அறிவுறுத்தினார். ஆனால் காந்தியடிகளின் உயிரைக் காக்க வேறுவழியின்றி இதே எரவாடா சிறையில் அம்பேத்கர் தலித்துகளுக்கான தனித் தொகுதியை கைவிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுவே வரலாற்று சிறப்புமிக்க புனே ஒப்பந்தம் எனப்படுகிறது. 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருவருக்கு தூக்கு
இந்திய ராணுவ தளபதி அருண்குமார் எஸ். வைத்யா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹர்ஜிந்தர் சிங் ஜிந்தா மற்றும் சுக்தேவ் சிங் சுகா ஆகியோர் 1992- ம் ஆண்டு இதே எரவாடா சிறையில்தான் தூக்கிலிடப்பட்டார்.
சஞ்சய் தத்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இதே எரவாடா சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications