ஐடி ஆக்ட் 66(A)க்கு எதிரான வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவு!

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லியைச் சேர்ந்த ஷிரேயா சிங்கால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஐடி ஆக்ட்66(A) என்பது அரசியல் சாசனத்தின் 4, 19 (1) (a) மற்றும் ஷரத்து 21 ஆகியவற்றை மீறுவதாக இருக்கிறது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, "இப்படியான ஒரு சட்டப்பிரிவை எதிர்த்து ஏன் எவருமே பொதுநலன் வழக்கைத் தாக்கல் செய்யவில்லை.. நாங்களே தன்னிச்சையாகவே இந்த வழக்கை எடுத்து விசாரிக்கலாமா? என யோசித்தோம்" என்று தலைமை நீதிபதி கூறியிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முன்னதாகவே தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 (A) ஐ நடைமுறைப்படுத்த சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது இந்த சட்டப் பிரிவின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் துணை கமிஷனர் அல்லது ஐஜி தலைமையிலான அதிகாரிகளின் ஒப்புதல் அவசியம் என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்ட நிலையில்தான் மத்திய அரசு அவசரமாக இந்த அறிவிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐடி ஆக்ட் 66(A)
இந்த ஐடி ஆக்ட் பிரிவானது சமூக வலைதளங்களில் ஹாயாக கருத்து சொல்வோரை சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. மமதா பானர்ஜிக்கு எதிரான கார்ட்டூன், சின்மயியுடனான மோதலில் கைது, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான கருத்தால் கைது ஆகியவை அனைத்துமே இந்தப் பிரிவின் கீழ்தான் மேற்கொள்ளப்பட்டவை. இதேபோல் பால்தாக்கரே மறைவின் போது அறிவிக்கப்படாத முழு அடைப்புக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட பெண்களும், ராஜ்தாக்கரேவுக்கு எதிராக போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட தானே இளைஞர் கைது செய்யப்பட்டதும் கூட இதே சட்டப் பிரிவின் கீழ்தான். இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்பது கருத்துரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் இத்தகைய நடவடிக்கைகளை இந்தியன் பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதற்கு ஆறுதல் தரும் வகையில் உச்சநீதிமன்றமும் கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறது என்கின்றனர் கருத்துரிமையாளர்கள்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications