27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பிய பால் ஜார்ஜ்: உயிரை காப்பாற்றிய வைகோவுக்கு நன்றி
சிவகாசி: துபாயில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு 27 ஆண்டுகாலத்திற்குப் பின் தமிழகம் திரும்பியுள்ள பால் ஜார்ஜ் நாடார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கலிங்கபட்டியில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பால் ஜார்ஜ் நாடார். கடந்த 1985-ம் ஆண்டு துபாயில் நடந்த தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக இவரை துபாய் போலீஸ் கைது செய்து சிறையில் அடைந்தது.

சுமார் ஓராண்டு நடந்த இந்த வழக்கில் 1986-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், பால் ஜார்ஜ் நாடாருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சமரசமாகி பால் ஜார்ஜ் நாடாரை மன்னித்துவிட்டதாக கூறி அவர்கள் கோர்ட்டில் கடிதம் கொடுத்தனர். எனினும் பால் ஜார்ஜ் நாடார் விடுவிக்கப்படாமல் துபாய் ஜெயிலில் தனி செல்சில் வைக்கப்பட்டிருந்தார்.
27 ஆண்டுகாலம் சிறையில் இருந்த பால் ஜார்ஜ் நாடார் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பினார். ஊருக்கு வந்த உடன் தன்னை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இன்று கலிங்கப்பட்டிக்கு சென்ற பால் ஜார்ஜ் நாடர், வைகோவை நேரில் சந்தித்து நன்றி கூறியதோடு மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது மாநில சட்டத்துறை செயலாளர் வெற்றிவேல் இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications