ராமதாஸ் மதுரையில் நுழைய விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது: ஹைகோர்ட் அதிரடி
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மதுரைக்குள் நுழைய கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசி வருவதாகக் கூறி அவர் மதுரை மாவட்டத்திற்குள் நுழைய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தடை விதித்தார். இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான காந்தி வாதாடுகையில் கூறியதாவது,
டாக்டர் ராமதாஸ் மதுரைக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை தனி மனித உரிமைக்கு எதிரானது. அவர் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் தெரிவிக்கவில்லை. இது குறித்து கலெக்டர் அனுப்பிய நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளித்த பிறகும் தடை விதித்துள்ளனர். எனவே இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்குமாறு கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினமே அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையே மதுரை மாவட்ட கலெக்டரின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ராமதாஸின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். ஆனால் அரசின் பதில் மனுவைப் பார்த்துவிட்டுத் தான் இடைக்காலத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த காஞ்சி வடக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பட்டுபாண்டியன் தலைமையில் பல்லாவரத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய பாமக துணை பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கி. ஆறுமுகம் கூறுகையில்,
அனைத்து சாதியினரும் அமைதியாக வாழ டாக்டர் ராமதாஸ் கூறும் அறிவுரைகளை சிலர் வேண்டும் என்றே திரித்து சொல்கின்றனர். அனைத்து சாதியினரும் ஒற்றுமையாக வாழவே அவர் பாடுபடுகிறார். அதனால் மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இந்த தடை உத்தரவில் உள்நோக்கம் உள்ளது.
வரும் பிப்ரவரி 6ம் தேதி அனைத்து சாதி சங்கங்கள் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் பெறக் கோரியும், அவரை கண்டித்தும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications