செவ்வாய் கிரகத்தில் 1,500 கி.மீ நீள வறண்ட நதி கண்டுபிடிப்பு!

Subscribe to Oneindia Tamil

Mars River
லண்டன்: செவ்வாய் கிரகத்தில் 1,500 கிலோமீட்டர் நீளமான வறண்ட நதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் சேட்டிலைட் என்ற செயற்கைக் கோள் இந்த நதியைப் படம் பிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 6 கி.மீ அகலம் கொண்ட இந்த நதியின் சில பகுதிகள் 1 கி.மீ. அளவுக்கு ஆழமாக உள்ளன. இதற்கு பல கிளை நதிகளும் உள்ளன.

1.8 பில்லியன் ஆண்டு முதல் 3.5 பில்லியன் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நதி ஓடியிருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.

இந்த நதிக்கு 'Reull Vallis' என்று பெயர் சூட்டியுள்ளது ஜரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.

இப்போது இந்த கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பிய க்யூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலமும் அது தரையிறங்கிய கேல் கிரேட்டர் என்ற இடத்துக்கு அருகே ஒரு பழமையான கால்வாய் போன்ற பகுதியை அடையாளம் கண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோ அல்லது ஏதோ ஒரு திரவமோ இருந்துள்ளதும், அது ஆறாக ஓடியதும் நிரூபணமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+