தனி தெலுங்கானா- எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிய மத்திய அரசு! தொடரும் போராட்டம்!
டெல்லி: ஆந்திர தனித் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்த தமது முடிவை மத்திய அரசு மீண்டும் ஒத்திவைப்பதாக அறிவித்திருப்பது ஆந்திர மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனித் தெலுங்கானா மாநிலம் கோரி அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சியினரும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் இன்று தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பாக முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்திருந்தார். இதனால் தனித் தெலுங்கானா தனி மாநிலம் உருவாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தெலுங்கானா தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இறுதி முடிவெடுக்க இன்னும் சிறிது காலமாகும் என்றார்.
இதேபோல் மத்திய அமைச்சரும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், ஆந்திராவின் அனைத்து பகுதி மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்த வேண்டியுள்ளது. அவர்கள் அனைவரும் டெல்லிக்கு அழைக்கப்பட வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவரையும் அழைக்க உள்ளோம். இவர்கள் அனைவரையும் விரைவில் அழைத்துப் பேசி முடிவு அறிவிப்போம் என்றார் அவர்.
இதனால் தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு இன்று எந்த முடிவையும் அறிவிக்காமல் வழக்கம் போல ஒத்திபோட்டுவிட்டது. இதனால் அதிருப்தியில் இருக்கும் தெலுங்கானா போராட்டக் குழுவினர் கடுமையான போராட்டங்களை இன்று நடத்தக் கூடும் என்பதால் ஹைதராபாத் நகரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு முடிவை ஒத்திவைப்பதாக அறிவிக்கும் முன்பே நேற்றே ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications