ஆசிட் வீச்சில் பலியான வினோதினி வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம்

காரைக்காலைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் வினோதினி. சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக பணியாற்றினார். கடந்த தீபாவளியின்போது ஊருக்கு சென்றவர் மீது அவரை ஒருதலையாக காதலித்த கூலித் தொழிலாளி சுரேஷ் ஆசிட் ஊற்றினார். இதில் வினோதினி படுகாயம் அடைந்ததோடு அவரது கண் பார்வையும் பறிபோனது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் மீது ஆட்சி வீசிய சுரேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விரைந்து முடிக்க புதுவை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வினோதினியின் வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விரைந்து முடிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அவர்களின் கோரிக்கையை ஏற்ற புதுவை அரசு விரைவு நீதிமன்றம் அமைப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. புதுவை நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் விரைவு நீதிமன்றம் அமைப்பது குறித்து அதனிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அதனால் விரைவு நீதிமன்றம் அமைப்பது குறித்து புதுவை அரசு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மனு அனுப்பு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் ரங்கசாமி சட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
இது குறித்து புதுவையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும், திமுக முன்னாள் எம்.பியுமான சி.பி. திருநாவுக்கரசு கூறுகையில்,
விரைவு நீதிமன்றம் அமைத்தால் 15 நாட்களில் இருந்து 1 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கலாம். அதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும். விரைவு நீதிமன்றத்தை காரைக்காலிலோ, புதுவையிலோ அமைக்கலாம். புதிதாக அமைக்கப்படும் நீதிமன்றத்திற்கு புதுவை மாநில நீதிபதி ஒருவரை நியமிக்கலாம். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஆசிட் வீச்சு வழக்குப் பதிவு செய்த போலீசார் சுரேஷ் மீது 188 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் வினோதினி இறந்தததால் அந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. எனவே அதற்குரிய புதிய குற்றப்பத்திரிக்கை பழைய குற்றப்பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications