காவிரி: நடுவர்மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட தடை கோரி பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்

காவிரி பிரச்னை தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தனது இறுதி தீர்ப்பை வெளியிட்டது. இந்த தீர்ப்பு கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை.
தீர்ப்பினை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி பலமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை வரும் 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 4-ந் தேதி உத்தரவிட்டது.
இதனிடையே, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய அனைத்துக்கட்சிக் குழுவினர் பிரதமரிடம் மாநிலத்தின் தற்போதைய நிலையை விளக்கி கூற உள்ளதாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
தண்ணீர் தர முடியாது
தற்போதுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறந்துவிட முடியாது என்றும் ஷெட்டர் கூறியுள்ளார். கர்நாடகாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலிலும் உச்சநீதிமன்ற உத்தரவை மதித்தே காவிரியில் ஏற்கெனவே தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமரை சந்திக்கும் போது, நடுவர்மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்துவோம் என்றும் ஷெட்டர் கூறியுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications