மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: ஜெயலலிதா குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டண உயர்வால் விலைவாசி அதிகரிக்கும். கூடுதல் கட்டணம் மறைமுக கட்டண உயர்வுக்கு வித்திட்டுள்ளது.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாடு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த ரயில்சேவையே அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களோ, அதிக நிதியோ அறிவிக்கப்படவில்லை. புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.
தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலை அடுத்தே சில திட்டங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. மொத்தத்தில் இது தமிழ்நாட்டிற்கு அதிருப்தி தந்த பட்ஜெட் இது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications