சரமாரியாக அடித்து இடுப்பெலும்பை உடைத்து .ஊனமாக்கிய போலீஸ்… சென்னையில் ஒரு புகார்
சென்னை: சென்னையில் பொய் புகார் போட்டு போலீசார் தனது இடுப்பு எலும்பை உடைத்து ஊனமாக்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட நபர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரட்டூர் எல்லையம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது:
நான் சென்ட்ரிங் வேலை செய்கிறேன். எனக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4ம் தேதி காலை 10.30 மணிக்கு எல்லையம்மன் நகர் 2வது தெருவில் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது, பின்னால் வந்த காரின் டயர் எனது கால் விரலில் காயத்தை ஏற்படுத்தியது. வலியால் துடித்தேன். மீண்டும் பின்புறமாக காரை எடுத்து என் மீது மோத வந்தார் டிரைவர். பயத்தில் கார் மீதே விழுந்தேன். இதில், கார் கண்ணாடி சேதம் அடைந்தது.
இதுகுறித்து, கார் உரிமையாளர் சீனிவாசன், கொரட்டூர் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தார். இதைதொடர்ந்து போலீசார் என்னை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணை எதுவும் செய்யாமல் என்னுடைய உடைகள் அனைத்தையும் கழற்றினர். போலீசார் அடித்ததில் முதுகு எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு உடைந்தது. மயங்கி விழுந்தேன். லஞ்சம் வாங்கி கொண்டு போலீசார் என்னை அடித்துள்ளனர்.
எனவே என்னை தாக்கிய போலீசார் மற்றும் பொய் புகார் அளித்த சீனிவாசன், அவரது மனைவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications