பலாத்கார வழக்குகளில் தூக்கு விதிக்கப்படுவோரின் கருணை மனுக்களை பரிசீலிக்கக் கூடாது: பார்லி.நிலைக் குழ
டெல்லி: பலாத்காரம் செய்து படுகொலை செய்யும் குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி பரிசீலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்து இருக்கிறது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலன் இன்றி 16 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு இதுதொடர்பாக ஆய்வு செய்து தமது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து உள்ளது. அதில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யும் குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர்களது கருணை மனுக்களை பொதுவாக ஜனாதிபதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. இது தொடர்பாக கிரிமினல் சட்ட திருத்த மசோதாவில் சில மாற்றங்களை செய்வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கருணை மனுக்களை ஜனாதிபதி விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் போது அதற்கான காரணங்களை தெரிவிப்பது போல், குற்றவாளியின் கருணை மனு பரிசீலிக்கப்பட்டு மன்னிப்பு வழங்கப்பட்டாலோ, தண்டனை குறைக்கப்பட்டாலோ அதற்கான காரணங்களும் பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications