வீர மரணமடைந்த எப்.பி.ஐயின் மோப்ப நாய் ’ஏப்’புக்கு சல்யூட்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில், எப்ஐபிக்காக சேவையாற்றி வந்த ஏப் என்ற மோப்ப நாய் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டது. இதையடுத்து அந்த நாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதன் பெயரை நினைவு சுவரில் எழுதுகின்றனர்.

நியூயார்க்கின் புறநகர் பகுதியான ஹெர்கிரமரியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மர்ம நபர் 4 பேரை சுட்டுக் கொன்றதாக, தகவல் அறிந்ததும் போலீஸ் படை அங்கு விரைந்து சென்று அந்த வீட்டை முற்றுகையிட்டது.

அப்போது எப்.பி.ஐ.யில் பணிபுரியும் ஏப் என்ற மோப்ப நாயும் போலீசாருடன் சென்றது.

மர்ம நபரைப் பிடிப்பதற்காக ஏப் வீட்டிற்குள் பாய்ந்து சென்றது. அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஏப் படுகாயமடைந்து விழுந்தது. உடனடியாக போலிசார் ஆம்புலன்ஸை வர வழைத்து ஏப்பை, கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்தது.

அதனைத் தொடர்ந்து 'ஏப்'க்கு போலீஸ் துறை சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் விர்ஜினியாவின் குவான் டிகோவில் உள்ள எப்பிஐ தலைமை அலுவலகத்தின் நினைவு சுவரில் இந்த நாயின் பெயர் எழுதி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+