வெயில் கொடுமை.. பக்தர்களுக்காக திருப்பதி கோவிலைச் சுற்றி பந்தல்
திருப்பதி: கொளுத்தும் வெயிலை சமாளிக்க திருப்பதி கோவிலை சுற்றி பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
கோடைகாலம் ஆரம்பமாகும் முன்பே திருப்பதி கோவில் பகுதியில் வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. தற்போது 99 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. இதனால் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள். கோடை விடுமுறை தொடங்கியதும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் வெயிலை சமாளிப்பதற்காக கோவில் முழுவதும் ஆங்காங்கே குளிர்ந்த பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. திருப்பதி கோவிலை சுற்றி 4 மாடவீதிகளிலும் குளிர்ந்த பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் நடக்கும்போது கால் சுடாத வகையில் இந்த பெயிண்ட் பாதுகாக்கிறது. பக்தர்கள் உள்ளே நுழையும் இடத்திலும், தரிசனம் முடிந்து வெளியே வரும் இடத்திலும் சிவப்பு நிற கார்பெட் விரிக்கப்பட்டுள்ளது.
வராக சுவாமி கோவில் முதல் வைபவ மண்டபம் வரை இந்த கார்பெட் விரிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விக்கப்படுகிறது. இதன்மூலம் பக்தர்கள் வெயிலை சமாளிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications