பெட்ரோல் விலை 50 காசு குறைகிறது, டீசல் விலை 50 காசு அதிகரிக்கிறது!
இந் நிலையில் சர்வதேச சந்தையில் கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
அதே நேரத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சீராகவே உள்ளது.
இந்த இரு காரணங்களால் கடந்த 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசு குறைக்கப்பட்டது. இந் நிலையில் பெட்ரோல் விலையை மேலும் குறைப்பதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு மேலும் 50 பைசா முதல் ரூ.1.50 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதே நேரத்தில் டீசல் விலை மேலும் 50 காசு உயரலாம் என்று தெரிகிறது. டீசலுக்கு மத்திய அரசு பெருமளவு மானியம் வழங்கி வருகிறது. அதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால் ஒரு லிட்டர் டீசல் விலை உடனடியாக ரூ. 11 வரை உயரும்.
இந்த இழப்பை ஈடுகட்ட ஒவ்வொரு மாதமும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு வீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு, அதை கடந்த மாதம் 23ம் தேதி முதல் அமலாக்கவும் ஆரம்பித்துவிட்டது.
இதன் தொடர்ச்சியாக டீசல் விலை விரைவிலேயே மேலும் 50 காசு அதிகரிக்கும் என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை குறைப்பும், டீசல் விலை உயர்வும் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரலாம் என்கிறார்கள்.