வீராணம் காவல் நிலையத்தை பூட்டிய வழக்கறிஞர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
சேலம்: வீராணம் காவல் நிலையத்தை பூட்டுப் போட்ட வழக்கில் கைதான வழக்கறிஞர் அரிபாபு மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
குடியுரிமை பாதுகாப்பு நடுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அரிபாபு. கடந்த 5ம் தேதி சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து நடப்பதாகக் கூறி பகத்சிங் இளைஞர் பாசறை அமைப்பின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது அரிபாபு தலைமையிலான போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை பூட்டினர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு பூட்டுபோட்ட அரிபாபு உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அரிபாபு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னீஸ் கலெக்டர் மகரபூஷணத்துக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின்பேரில் அரிபாபுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் கோவை சிறையில் உள்ள அரிபாபுவிடம் வழங்கப்பட்டது. இதற்கிடையே வீராணம் காவல் நிலையத்தை பூட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு நேற்று சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. குண்டர் சடத்தில் சிறையில் அடைக்கப்படுவதால் அரிபாபுவை தவிர பிறர் இன்று விடுவிக்கப்படுகின்றனர்.
ஈழத் தமிழர் ஆதரவு போராட்டம், பழமையான மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் இடிப்பை எதிர்த்து போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் அரிபாபு கலந்து கொண்டுள்ளார். அவர் மீது போலீசார் 11 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தான் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications