லால்குடி அருகே பெண் எரித்துக் கொலை: கற்பழிப்பா? என போலீஸ் தீவிர விசாரணை
திருச்சி: இன்று காலை திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
இறந்து கிடந்த பெண் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். நைட்டி மட்டும் அணிந்திருந்த அவர் உடல் பெட்ரோல் போன்ற ஒரு எரிபொருளால் எரிக்கப்பட்டிருந்தது. உடல் முழுவதும் அடையாளம் காண முடியாதபடி தீயில் கருகியிருந்தது. ஒரு கை மட்டும் எரியாத நிலையில் இருந்தது. உடல் கிடந்த இடம் அருகே பெண்கள் அணியும் செருப்பு கிடந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர் பெருமாள் தடயங்களை சேகரித்தார். மேலும் மோப்ப நாய் ஜாக் மூலம் துப்பு துலக்கப்பட்டது. அது சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி அங்குள்ள சுடுகாட்டில் நின்றது. அந்த பெண்ணை கடத்தி வந்து சுடுகாட்டில் வைத்து கொன்று பின்னர் தண்டவாளத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கடத்தி வந்து கற்பழிக்கப்பட்டாரா? என்பது போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் போட்டால் உடல் மீது ரயில் ஏறி அடையாளம் தெரியாமல் போகும் என்ற எண்ணத்தில் கொலையாளிகள் அங்கு உடலை போட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் அந்த தண்டவாளம் சென்னை-திருச்சி பாதையில் போடப்பட்டு வரும் 2-வது ரயில் பாதையாகும். இதில் பணிகள் முடிந்து வெள்ளோட்டம் முடியாததால் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. எனவே தான் உடல் எந்த சேதமும் அடையவில்லை. இதனால் கொலையாளிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.
சம்பவ இடத்திற்கு அரியலூர் ரயில்வே போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் 10.30 மணி வரை உடல் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்படவில்லை. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications