லால்குடி அருகே பெண் எரித்துக் கொலை: கற்பழிப்பா? என போலீஸ் தீவிர விசாரணை
திருச்சி: இன்று காலை திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
இறந்து கிடந்த பெண் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். நைட்டி மட்டும் அணிந்திருந்த அவர் உடல் பெட்ரோல் போன்ற ஒரு எரிபொருளால் எரிக்கப்பட்டிருந்தது. உடல் முழுவதும் அடையாளம் காண முடியாதபடி தீயில் கருகியிருந்தது. ஒரு கை மட்டும் எரியாத நிலையில் இருந்தது. உடல் கிடந்த இடம் அருகே பெண்கள் அணியும் செருப்பு கிடந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர் பெருமாள் தடயங்களை சேகரித்தார். மேலும் மோப்ப நாய் ஜாக் மூலம் துப்பு துலக்கப்பட்டது. அது சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி அங்குள்ள சுடுகாட்டில் நின்றது. அந்த பெண்ணை கடத்தி வந்து சுடுகாட்டில் வைத்து கொன்று பின்னர் தண்டவாளத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கடத்தி வந்து கற்பழிக்கப்பட்டாரா? என்பது போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் போட்டால் உடல் மீது ரயில் ஏறி அடையாளம் தெரியாமல் போகும் என்ற எண்ணத்தில் கொலையாளிகள் அங்கு உடலை போட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் அந்த தண்டவாளம் சென்னை-திருச்சி பாதையில் போடப்பட்டு வரும் 2-வது ரயில் பாதையாகும். இதில் பணிகள் முடிந்து வெள்ளோட்டம் முடியாததால் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. எனவே தான் உடல் எந்த சேதமும் அடையவில்லை. இதனால் கொலையாளிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.
சம்பவ இடத்திற்கு அரியலூர் ரயில்வே போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் 10.30 மணி வரை உடல் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்படவில்லை. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications