ராமதாஸ் மீது வழக்கு: முதல்வருக்கு திருமாவளவன் நன்றி

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மரக்காணம் வன்முறை தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மாமல்லபுரம் விழாவில் காவல் துறையின் நிபந்தனைகளை மீறிய டாக்டர் ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்விழாவில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குடிபோதையில் இருந்ததையும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதையும் ஆபாசமாகப் பேசியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விழாவுக்கு வந்தவர்கள் போலி பதிவு எண் கொண்ட வாகனங்களில் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்பாவி தலித் மக்களின் குடிசைகள், அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை கொளுத்தியதையும் அம்பலப்படுத்தியுள்ளார். மாநாட்டிற்கு வந்தவர்கள் தாறுமாறாக வண்டி ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது வழியில் பிற கட்சிகளின் கொடிகளையும் விளம்பர பேனர்களையும் சேதப்படுத்தியுள்ளனர் என்றும், வாலாஜாபாத் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.
வாய்மையே வெல்லும், ஜனநாயகமே நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சரியான நேரத்தில் உண்மையை உரக்கச் சொல்லிய முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் நன்றி. இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications