கேரள லாட்டரியில் தொழிலாளிக்கு ரூ.2 கோடி, 101 பவுன் தங்கம் பரிசு: ஆனால், சீட்டைக் காணவில்லை!!!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள அரசு லாட்டரியில் மரம் வெட்டும் தொழிலாளிக்கு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவர் அந்த லாட்டரி சீட்டை தொலைத்துவிட்டதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
கேரள மாநிலம் திருவல்லாவைச் சேர்ந்தவர் மணி(40). மரம் வெட்டும் தொழிலாளி. அவர் கேரள அரசு லாட்டரியின் சித்திரை விஷு பம்பர் குலுக்கல் சீட்டை வாங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி குலுக்கல் நடந்தது. அதில் முதல் பரிசான ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் மணிக்கு விழுந்தது.

உடனே மணி ஊருக்கு திரும்பி வந்து பீரோவில் லாட்டரி சீட்டை தேடினார். ஆனால் அவர் துரதிர்ஷ்டம் பரிசு விழுந்த லாட்டரி சீட்டைக் காணவில்லை. இதனால் அவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications