பின் வாங்கிய சீன படைகள் மீண்டும் இந்திய எல்லைக்குள் நுழைந்தன!

சீனப்படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா - சீனா எல்லையில் லடாக் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தன. சுமார் 19 கி.மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் ஊடுருவி நின்றன. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின.
இந்த நிலையில், சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண சீன - இந்திய ராணுவ அதிகாரிகள் கூட்டாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டு, சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்தது. அதன்படி, அத்துமீறி நுழைந்த பகுதியில் இருந்து சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன.
மீண்டும் ஊடுருவல்
இந்த நிலையில், சீன பிரதமர் இந்தியாவுக்கு வந்து சென்ற பின்னர் மீண்டும் சீன படைகள் வாலாட்ட தொடங்கி விட்டன. ஏற்கனவே ஊடுருவிய பகுதியில் இருந்து வாபஸ் பெற்றுச்சென்ற படைகள் மீண்டும் அதே லடாக் பகுதிக்குள் ஊடுருவி கேம்ப் அடித்துள்ளன.
அத்துடன் ‘ஸ்ரீஜாப்' பகுதியில் ‘பிங்கர்-8' என்ற இடத்தில் இருந்து ‘பிங்கர்-6' என்ற இடம்வரை 5 கி.மீட்டர் தூரத்துக்கு ‘மெட்டல்' சாலையையும் சீன படைகள் அமைத்து உள்ளன. இந்தப்பகுதி தங்கள் நாட்டு எல்லையுடன் சேர்ந்தது என்று சீனா கூறுகிறது. ஆனால், இது லடாக் பகுதியுடன் சேர்ந்த இந்தியப் பகுதிதான் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ரோந்துப் படைகள் தடுக்கப்பட்டன
இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் வழக்கமான ரோந்துப்பணிகள் மேற்கொள்ளும் இந்தோ- திபெத் எல்லைக் காவல் படையினர் நேற்று சீனா ஊடுருவிய பகுதியில் ரோந்துப் பணிக்காக சென்றனர். அவர்களை சீன படையினர் தடுத்து, திருப்பி அனுப்பி விட்டனர்.
வழக்கம் போல, இந்த முறையும் மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications