சி.பி.எஸ்.இதேர்வு முடிவுகள் வெளியீடு... சென்னை மண்டலத்தில் 91.83 % தேர்வு
சென்னை: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் மொத்தம் 91 புள்ளி 83 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய கல்வி தேர்வு வாரியம் நடத்திய சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. சென்னை மண்டலத்தில் மொத்தம் 77 ஆயிரத்து 616 மாணவர்களிள் தேர்வு எழுதினர். இதில் 71 ஆயிரத்து 271 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு எழுதிய 42,253 மாணவர்களில் 38,057 பேரும், 35,363 மாணவிகளில் 33, 214 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் தேர்வு எழுதிய 9 ஆயிரத்து 738 பேரில், 8 ஆயிரத்து 905 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 96.40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் 97.43 விழுக்காடு மாணவர்களும், புதுச்சேரியில் 97.31 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இன்னும் 5 தினங்களுக்குள் 300 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தென் மண்டலத்தில் மட்டும் 6,345 பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 16-ஆம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ தென் மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications