கடலூர்: சில்வர் பீச்சில் குப்பையில் ‘தங்க வேட்டை’ நடத்தும் மர்ம கும்பல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர், சில்வர் பீச்சில் அதிகாலை வேளைகளில் பொதுமக்கள் தவற விடும் தங்க நகைகளைத் தேடி, ஒரு கும்பல் தேடுதல் வேட்டை நடத்துகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

பொதுவாக மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் சில்வர் பீச்சில், தற்போது கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கத்தை தணித்து கொள்ளவும் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர். பொழுதை போக்க வரும் இவர்கள், சில சமயங்களில் தங்கள் செல்போன்கள், பணம், நகை உள்ளிட்ட பொருட்களை தவற விடும் பரிதாபமும் நடப்பதுண்டு.

இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் தவற விட்டவர்கள் பெரும்பாலும் வெறும்கையுடனே திரும்புகின்றனர். இதனை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் சிலர், அதிகாலை வேளைகளில் சில்வர் பீச் மணற்பரப்பில் தங்க நகைகளை தேடி அலைவது வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில் சில்வர்பீச்சில் நேற்று மாலை கோடை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு வந்தவர்கள் பொருட்களை தவறவிட்டு இருப்பார்கள் என்ற எண்ணத்தில் இன்று காலை பலர் சில்வர்பீச் மணல்பரப்பில் நகை, பணம், செல்போன்களை தேடினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+