7,000 வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள்: திக்குமுக்காடிப் போன கொடைக்கானல்

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதில் இருந்து தப்பிக்க மக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அதிலும் கொடைக்கானலில் கோடை விழா துவங்கியதில் இருந்தே கடந்த 1 வாரமாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் 7,000க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் அங்குள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் காட்டேஜ்கள், வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டும் பலர் இரவு நேரத்தில் தங்க இடம் கிடைக்காமல் வாகனங்களிலேயே தூங்கினர். மேலும் பலர் மலையை விட்டு இறங்கிச் சென்றனர். ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்ததால் கொடைக்கானலில் எங்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. நேற்று கொடைக்கானல் நகர் முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை 5 கிமீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்தை சீர் செய்ய போதிய போலீசார் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சிலரே சீர் செய்தனர்.












Click it and Unblock the Notifications